செய்திகள்

காரைக்குடியில் கரும்புச்சாறு எந்திரத்தில் சிக்கிய பெண்ணின் கை விரல்கள்

Published On 2017-06-28 17:19 IST   |   Update On 2017-06-28 17:19:00 IST
காரைக்குடியில் கரும்புச்சாறு எந்திரத்தில் பெண்ணின் கைவிரல்கள் சிக்கியதால் வலி தாங்க முடியாமல் துடித்தது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

காரைக்குடி:

காரைக்குடி செஞ்சை அவ்வையார் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மனைவி ஆதம்மை(52) இருவரும் காரைக்குடி கீழவூரணி பகுதியில் கரும்புச்சாறு கடை நடத்தி வருகின்றனர்.

நேற்று மதியம் கரும்புச்சாறு தயாரிக்கும்போது ஆதம்மையின் வலது கை விரல்கள் எந்திரத்தின் நடுவில் சிக்கிக்கொண்டன.தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் பல்வேறு முயற்சி செய்தும் கையை மீட்க முடியவில்லை. 108 ஆம்புலன்சில் வந்த செவிலியர் வலி தெரியாமல் இருக்க அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் இருந்து ஊசி எடுத்துவந்து செலுத்தினார். பின்னர் கட்டர் மெசினால் கரும்புச்சாறு எந்திரத்தை வெட்டியபிறகே கையை மீட்க முடிந்தது.பிறகு ஆதம்மை மயங்கியநிலையில் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எந்திரத்தில் சிக்கிய கையோடு சுமார் ஒருமணி நேரமாக ஆதம்மை வலியால் துடித்தது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

Similar News