செய்திகள்

சிவகங்கை நகரில் வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது

Published On 2017-06-28 15:28 IST   |   Update On 2017-06-28 15:28:00 IST
சிவகங்கை நகரில் வீடுபுகுந்து நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை:

சிவகங்கை நகர் செந்தமிழ் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 27). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவு அருகில் வைத்துவிட்டு வெளியே சென்றார்.

இந்நிலையில் இதை நோட்டமிட்ட மர்ம நபர் சாவியை எடுத்து கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் பிரோவில் இருந்த 2½ பவுன் நகையை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றார்.

அப்போது பிரபாகரன் வீட்டுக்குள் வரவே திருடனை கையும் களவுமாக பிடித்து நகர் போலீசில் ஓப்படைத்தார். இன்ஸ்பெக்டர் மோகன் விசா ரணை நடத்தியதில் மதுரை சம்பக்குளத்தை சேர்ந்த பிரதீப்ராஜன் (38) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தார்.

Similar News