செய்திகள்

மானாமதுரை அருகே வாலிபரை தாக்கி ரூ. 1 லட்சம்- 13 பவுன் நகை கொள்ளை

Published On 2017-06-17 18:01 IST   |   Update On 2017-06-17 18:01:00 IST
முன் விரோதத்தில் வாலிபரை தாக்கி ரூ. 1 லட்சம்- 13 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற உறவினர் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவகங்கை:

மானாமதுரை தாலுகா கே. ஆலங்குளத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 36). இவருக்கும் புரசைஉடைப்பை கிராமத்தைத் சேர்ந்த உறவினர் ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில் சேகர், தனது மகளுக்கு காதணி விழாவை வீட்டில் நடத்தினார். அப்போது அங்கு வந்த ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொத்தன், ஆறுமுகம், கணேசன் ஆகியோர் ராஜாவிடம் தகராறு செய்தனர்.

இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் ராஜாவை சரமாரியாக தாக்கினர். மேலும் வீட்டில் இருந்த ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம், 13 பவுன் நகையை எடுத்துக் கொண்டு தப்பினர்.

தாக்குதலில் காயம் அடைந்த சேகர் மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் பேரில் மானாமதுரை சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரக்கத்துல்லா வழக்குப்பதிவு செய்து ராஜா உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

Similar News