செய்திகள்

சிவகங்கையில் அரசு விடுதியில் தங்கியிருந்த 2 பள்ளி மாணவிகள் மாயம்

Published On 2017-06-17 15:50 IST   |   Update On 2017-06-17 15:50:00 IST
சிவகங்கையில் மாயமான மாணவிகளை குறித்து குழந்தைகள் நல காப்பாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவிகளை தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:

காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள்கள் கற்பகம் (வயது 15), பாகம்பிரியாள் (13).

இவர்கள் 2 பேரும், சிவகங்கையில் உள்ள அரசு விடுதியில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். கற்பகம் 10-ம் வகுப்பும், பாகம்பிரியாள 7-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று சகோதரிகள் 2 பேரும் வழக்கம்போல் விடுதியில் இருந்து பள்ளிக்கு செல்வ தாக கூறிவிட்டு சென்றனர். அதன்பின்னர் மாலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் விடுதிக்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இதுகுறித்து குழந்தைகள் நல காப்பாளர் ஜெயப் பிரகாஷ் சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவிகளை தேடி வருகிறார்கள்.

Similar News