செய்திகள்
தேவகோட்டையில் பட்டதாரி பெண் மாயம்
தேவகோட்டையில் பட்டதாரி பெண் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்தவர் அமுதா. இவரது மகள் புஷ்பகலா தேவி (வயது 21). பி.ஏ. முடித்துள்ள இவர், வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த புஷ்பகலா தேவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பலன் இல்லை.
இது குறித்து அமுதா தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்.