செய்திகள்
முதியோர்களின் தேவைகளை உணர்ந்து முக்கியத்துவம் அளிப்போம்: கலெக்டர் அறிவுரை
உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தையொட்டி முதியோர்களின் தேவைகளை உணர்ந்து முக்கியத்துவம் அளிப்போம் என சிவகங்கை கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தையொட்டி சிவகங்கை கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதியோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், அவர்கள் பாதுகாப்பான, கெளரவம் மிக்க வாழ்க்கையினை வாழ்வதற்காகவும், தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அவர்களது நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. முதியோர் நலன் தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல்கள், சட்டங்களின் அடிப்படையில் மற்றும் தமிழக அரசின் முதியோர் நல கொள்கைகளின் அடிப்படையின்படி, பல்வேறு திட்டங்களையும் ஆதரவற்ற முதியோரைப் பராமரிக்க முதியோர் இல்லங்கள் நடத்துதல், அரசு தற்பொழுது செயல்படுத்தி வருகிறது.
முதியோர் மனோரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். வளர்ந்து வரும் மக்கள் தொகை, உடைந்து போன கூட்டுக்குடும்பம், பொருளாதார பற்றாக்குறை மற்றும் மேல் நாட்டு கலாசாரத்தின் சீரழிவு போன்றவை முதியவர்களின் மீதான அக்கறையை குறைக்கின்றது.
ஆகவே நாம் முதியவர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்துவம் அளித்திட இந்த முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாளில் நாம் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட செயல்களால் முதியோருக்கு உதவிட சூளுரை ஏற்போம்.
முதியோர்களிடம் கோபத்தையும், தகாத வார்த்தைகளால் பேசுவதையும் தவிர்ப்போம்.
முதியோர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்தால் தட்டி கேட்போம்.
முதியோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு செவி கொடுப்போம்.
முதியோர்களை மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்துவதை தவிர்ப்போம்.
முதுமை காலத்தில் முதியோர்களின் நலனில் அக்கறை காட்டுவோம்.
முதியோர்களுக்கு பேருந்து, மருத்துவமனை, வங்கி மற்றும் அனைத்து இடங்களிலும் முன்னுரிமை அளிப்போம்.
முதியோர்களிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவோம்.
முதியோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம் முதியோர்கள் கட்டணமில்லா 1253 என்ற உதவி எண் தொலைபேசி சென்னையிலும், 1800-800-1253 என்ற தொலைபேசி ஏனைய தமிழகத்திலும் சட்டம் மற்றும் மருத்துவ உதவி, முதியோர் இல்லங்களில் சேர்க்கை, முதியோர் பாதுகாப்பு சட்டம் 2007 பற்றிய தகவல்கள் பெற உதவலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தையொட்டி சிவகங்கை கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதியோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், அவர்கள் பாதுகாப்பான, கெளரவம் மிக்க வாழ்க்கையினை வாழ்வதற்காகவும், தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அவர்களது நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. முதியோர் நலன் தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல்கள், சட்டங்களின் அடிப்படையில் மற்றும் தமிழக அரசின் முதியோர் நல கொள்கைகளின் அடிப்படையின்படி, பல்வேறு திட்டங்களையும் ஆதரவற்ற முதியோரைப் பராமரிக்க முதியோர் இல்லங்கள் நடத்துதல், அரசு தற்பொழுது செயல்படுத்தி வருகிறது.
முதியோர் மனோரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். வளர்ந்து வரும் மக்கள் தொகை, உடைந்து போன கூட்டுக்குடும்பம், பொருளாதார பற்றாக்குறை மற்றும் மேல் நாட்டு கலாசாரத்தின் சீரழிவு போன்றவை முதியவர்களின் மீதான அக்கறையை குறைக்கின்றது.
ஆகவே நாம் முதியவர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்துவம் அளித்திட இந்த முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாளில் நாம் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட செயல்களால் முதியோருக்கு உதவிட சூளுரை ஏற்போம்.
முதியோர்களிடம் கோபத்தையும், தகாத வார்த்தைகளால் பேசுவதையும் தவிர்ப்போம்.
முதியோர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்தால் தட்டி கேட்போம்.
முதியோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு செவி கொடுப்போம்.
முதியோர்களை மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்துவதை தவிர்ப்போம்.
முதுமை காலத்தில் முதியோர்களின் நலனில் அக்கறை காட்டுவோம்.
முதியோர்களுக்கு பேருந்து, மருத்துவமனை, வங்கி மற்றும் அனைத்து இடங்களிலும் முன்னுரிமை அளிப்போம்.
முதியோர்களிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவோம்.
முதியோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம் முதியோர்கள் கட்டணமில்லா 1253 என்ற உதவி எண் தொலைபேசி சென்னையிலும், 1800-800-1253 என்ற தொலைபேசி ஏனைய தமிழகத்திலும் சட்டம் மற்றும் மருத்துவ உதவி, முதியோர் இல்லங்களில் சேர்க்கை, முதியோர் பாதுகாப்பு சட்டம் 2007 பற்றிய தகவல்கள் பெற உதவலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.