செய்திகள்
திருப்போரூர் முருகன் கோவிலில் ரூ.35 லட்சம் உண்டியல் வசூல்
திருப்போரூர் முருகன் கோவிலில் 2 மாதத்தில் ரூ.35 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்தன.
திருப்போரூர்:
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் நேற்று எண்ணப்பட்டது. வேலூர் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் (நகை சரி பார்ப்பு) தனபாலன், கோவில் செயல் அலுவலர் நற்சோனை, கோவில் ஆய்வாளர் கோவிந்தராஜ், மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டது.
இதில் 35 லட்சத்து 38 ஆயிரத்து 485 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லரையாகவும், 335 கிராம் தங்கமும், 2750 கிராம் வெள்ளியும், சில வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்தன.
மேலும் செல்லாத சில பழைய ரூபாய் நோட்டுகளும் இருந்தன. உண்டியல் பணம் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சென்னை கோபிகா ரமணா தனியார் அமைப்பு தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். அவர்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஈடுபட்டனர். இதையொட்டி திருப்போரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடைசியாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி அனைத்து உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டது.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் நேற்று எண்ணப்பட்டது. வேலூர் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் (நகை சரி பார்ப்பு) தனபாலன், கோவில் செயல் அலுவலர் நற்சோனை, கோவில் ஆய்வாளர் கோவிந்தராஜ், மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டது.
இதில் 35 லட்சத்து 38 ஆயிரத்து 485 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லரையாகவும், 335 கிராம் தங்கமும், 2750 கிராம் வெள்ளியும், சில வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்தன.
மேலும் செல்லாத சில பழைய ரூபாய் நோட்டுகளும் இருந்தன. உண்டியல் பணம் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சென்னை கோபிகா ரமணா தனியார் அமைப்பு தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். அவர்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஈடுபட்டனர். இதையொட்டி திருப்போரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடைசியாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி அனைத்து உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டது.