செய்திகள்
காஞ்சீபுரம் அருகே கால்வாயில் பெண் பிணம்
காஞ்சீபுரம் அருகே கால்வாயில் பெண் பிணமாக கடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள கால்வாயில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள் காஞ்சீபுரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே அவர் சுற்றிவந்தததை சிலர் பார்த்து உள்ளனர். பணம் பறிக்கும் முயற்சியில் மர்மநபர்கள் அவரை கடத்தி கால்வாய் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.