செய்திகள்

செம்மஞ்சேரியில் தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலி

Published On 2017-06-05 15:28 IST   |   Update On 2017-06-05 15:28:00 IST
செம்மஞ்சேரியில் தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவான்மியூர்:

செம்மஞ்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சின்னையா. அவரது நண்பர் ரங்கநாதன். நேற்று இரவு இருவரும் கேளம்பாக்கத்தில் இருந்து செம்மஞ்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வளைவில் திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியது. இதில் சின்னையா பரிதாபமாக இறந்தார். ரங்கநாதன் படுகாயம் அடைந்து சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் கருப்பையா என்பவரை கைது செய்தனர்.

Similar News