செய்திகள்

ஆதம்பாக்கத்தில் கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளை

Published On 2017-06-02 14:50 IST   |   Update On 2017-06-02 14:50:00 IST
ஆதம்பாக்கத்தில் கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோட்டில் சித்திரை என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் கடையின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு பணப்பெட்டியை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர் இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆதம்பாக்கத்தில் சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை மற்றும் வழிப்பறி நடக்கிறது. இது குறித்து போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது, இரவு ரோந்து பணிக்கு போதிய போலீசார் இல்லை” ஏன அவர் தெரிவித்தார்.

Similar News