செய்திகள்

தேவகோட்டை அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: கணவர் கைது

Published On 2017-05-31 14:45 IST   |   Update On 2017-05-31 14:45:00 IST
தேவகோட்டை அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை:

தேவகோட்டை தாலுகா சின்ன கொட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி கோகிலா (வயது 22). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணமானது. தற்போது ஆண் குழந்தை உள்ளது.

சிங்கப்பூரில் கார் டிரைவராக பணியாற்றி வந்த ராஜேஷ்குமார் அங்கிருந்து ஊர் திரும்பி விட்டார்.

இந்த நிலையில் அவர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக, தேவகோட்டை அனைத்து மகளிர் போலீசில் கோகிலா புகார் கொடுத்துள்ளார்.

அதில், திருமணத்தின் போது 35 பவுன் நகை, ரூ. 3 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது தொழில் தொடங்க கூடுதல் பணம் வாங்கி வருமாறு கணவர் சித்ரவதை செய்கி றார். இதற்கு அவரது குடும்பத்தினரும், துணை நிற்கின்றனர் என குறிப் பிட்டுள்ளார்.

இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி விசாரணை நடத்தி, ராஜேஷ்குமார், அவரது பெற்றோர் ராஜேந் திரன்-மீனா, சகோதரர் ரமேஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் ராஜேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News