செய்திகள்

காஞ்சீபுரத்தில் கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது: மிரட்டி கெடுத்ததாக 2 பேர் கைது

Published On 2017-05-24 15:29 IST   |   Update On 2017-05-24 15:29:00 IST
காஞ்சீபுரத்தில் சிறுமி குழந்தை பெற்றதால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் சிறுமியை மிரட்டி கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த உத்திரமேரூரை சேர்ந்த 14 வயது சிறுமி ஆடு மேய்த்து வந்தாள்.

கடந்த ஆண்டு ஆடு மேய்க்க சென்றபோது அதே பகுதி எட்டியப்பன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன், முருகதாஸ் ஆகியோர் சிறுமியை மிரட்டி கற்பழித்தனர்.

இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டினர். இதனால் பயந்து போன சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய 2 பேரும் தொடர்ந்து சிறுமியை கற்பழித்து வந்தனர்.

இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். பெற்றோர் விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணனும், முருகதாசும் மிரட்டி கற்பழித்து இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி அவர்கள் 2 பேரிடமும் நியாயம் கேட்டு வந்தார்.

இதற்கிடையே நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை பிரசவத்துக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

சிறுமி குழந்தை பெற்றதால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் காஞ்சீபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை செய்தபோது சிறுமியை எட்டியப்பனும், முருகதாசும் கற்பழித்து கர்ப்பம் ஆக்கியது தெரிந்தது.

இது குறித்து காஞ்சீபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன், முருகதாசை கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான இருவரும் மாமனார்-மருமகன் ஆவர்.

Similar News