செய்திகள்
அடுத்தடுத்து 3 அரசு பஸ்கள் மோதல்: டிரைவர்கள் உள்பட 12 பேர் காயம்
திருமயம் அருகே அடுத்தடுத்து 3 அரசு பஸ்கள் மோதிக்கொண்டதில் 2 டிரைவர்கள் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை:
திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காரைக்குடியை நோக்கி நேற்று மதியம் ஒரு அரசு பஸ் வந்தது. பஸ்சை டிரைவர் பால்ராஜ் (வயது 55) ஓட்டினார். எதிரே ராமநாதபுரத்தில் இருந்து சேலத்தை நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்தது. இந்த பஸ்சை டிரைவர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் (35) ஓட்டினார். திருமயத்தை அடுத்த ஊனையூர் அருகே வந்தபோது 2 அரசு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
அப்போது காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மற்றோரு அரசு பஸ், விபத்தில் சிக்கி நின்ற சேலம் அரசு பஸ்சின் பின் பகுதியில் மோதியது. இந்த விபத்தில் 3 அரசு பஸ்களின் முன்பகுதியும் சேதமடைந்தது.
மேலும் டிரைவர்கள் பால்ராஜ், முருகேசன் மற்றும் காரைக்குடி நோக்கி சென்ற அரசு பஸ்சிலும், சேலத்தை நோக்கி சென்ற அரசு பஸ்சிலும் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜபரத்(17), ஜெமாலா (34), ரேவதி (35), தொல்காப்பியன் (11), தாமரை (15), கமலா (35), அருள்பிரகாஷ் (25), கல்பனா (33), சிவக்குமார் (41), பால்ராஜ் (55) ஆகிய 12 பேர் காயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் டிரைவர் முருகேசன், ராஜபரத் உள்பட 3 பேர் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் புதுக் கோட்டை-காரைக்குடி நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காரைக்குடியை நோக்கி நேற்று மதியம் ஒரு அரசு பஸ் வந்தது. பஸ்சை டிரைவர் பால்ராஜ் (வயது 55) ஓட்டினார். எதிரே ராமநாதபுரத்தில் இருந்து சேலத்தை நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்தது. இந்த பஸ்சை டிரைவர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் (35) ஓட்டினார். திருமயத்தை அடுத்த ஊனையூர் அருகே வந்தபோது 2 அரசு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
அப்போது காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மற்றோரு அரசு பஸ், விபத்தில் சிக்கி நின்ற சேலம் அரசு பஸ்சின் பின் பகுதியில் மோதியது. இந்த விபத்தில் 3 அரசு பஸ்களின் முன்பகுதியும் சேதமடைந்தது.
மேலும் டிரைவர்கள் பால்ராஜ், முருகேசன் மற்றும் காரைக்குடி நோக்கி சென்ற அரசு பஸ்சிலும், சேலத்தை நோக்கி சென்ற அரசு பஸ்சிலும் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜபரத்(17), ஜெமாலா (34), ரேவதி (35), தொல்காப்பியன் (11), தாமரை (15), கமலா (35), அருள்பிரகாஷ் (25), கல்பனா (33), சிவக்குமார் (41), பால்ராஜ் (55) ஆகிய 12 பேர் காயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் டிரைவர் முருகேசன், ராஜபரத் உள்பட 3 பேர் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் புதுக் கோட்டை-காரைக்குடி நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.