செய்திகள்

அரசு மருத்துவமனையில் பணியை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம்

Published On 2017-04-21 17:13 GMT   |   Update On 2017-04-21 17:13 GMT
கடலூர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பணியை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.
கடலூர்:

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டம் சார்பில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவ பட்ட மேற்படிப்பில் தமிழ்நாடு அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ததை மீண்டும் பெற்றுத்தரக் கோரியும், அதே இட ஒதுக்கீட்டுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்குமாறும், தமிழக மக்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து கிடைத்திட தமிழக அரசை வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் டாக்டர் கேசவன் தலைமை தாங்கினார். செயலாளர் புலிகேசி, பொருளாளர் குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு தலைமை மருத்துவமனை, வட்ட அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிந்து வரும் டாக்டர்கள் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

Similar News