செய்திகள்
கட்டிட வேலைக்கு சென்ற தொழிலாளி மாயம்
ஈரோட்டில் கட்டிட வேலைக்கு சென்ற தொழிலாளி மாயமானார். இது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் தொழிலாளியை தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு, வீரப்பன்சத்திரம், முல்லைவீதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது65). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வீரம்மாள் (வயது 60). பெரியசாமி கட்டிட வேலைக்காக அவ்வபோது வெளியூருக்கு சென்று அங்கேயே தங்கி வேலை பார்ப்பது வழக்கம்.
அதே போன்று கடந்த மாதம் வேலை சம்பந்தமாக வெளியூருக்கு சென்று விட்டார். அதற்கு பிறகு அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. வீரம்மாள் தனது கணவர் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து வீரம்மாள் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தறுமாறு புகார் செய்தார். அதன்பேரில் வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெரியசாமியை தேடி வருகிறார்கள்.