செய்திகள்

பண்ருட்டியில் டாஸ்மாக் கடை முன்பு பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-04-19 17:14 IST   |   Update On 2017-04-19 17:14:00 IST
பண்ருட்டியில் டாஸ்மாக் கடை முன்பு பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைவரும் கைது செய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

பண்ருட்டி:

மதுக்கடைகளை மூடக் கோரி பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பத்தில் டாஸ்மாக் கடை முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. நெய்வேலி தொகுதி பொறுப்பாளரும் பண்ருட்டி ஒன்றிய தலைவருமான செல்வமணி தலைமை தாங்கினார். பண்ருட்டி நகர பொது செயலாளர் டைல்ஸ் தண்டபாணி முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் ஆதிமூலம், செல்வம், ராமர், ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், கோபால், ரங்கநாதன், ஞானசேகர், தண்டபாணி, இளையராஜா, மகளிர் அணி சுந்தரி, செல்வநாயகி, சுமதி, லட்சுமி, பண்ருட்டி நகர நிர்வாகிகள் செல்வம், புனிதவேல், எழிலரசன் உள்பட 100-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் காடாம்புலியூர் போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.

இதேபோல காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சியில் கடலூர் மாவட்ட பா.ஜ.க. பொது செயலாளர் சக்திகணபதி முன்னிலையில் ஒன்றியத் தலைவர் பழனிராஜா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநில துணைத் தலைவர் டாக்டர் எஸ்.பி.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இதில் ராஜேஷ், மோகன்தாஸ், காமராஜ், கோபிநாத் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் டாஸ்மாக் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பிரசார அணி தலைவர் பண்ருட்டி கோவிந்தராஜ், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் திராசு சுகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

Similar News