செய்திகள்
மானாமதுரை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
மானாமதுரை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மானாமதுரை:
மானாமதுரை தாலுகா பழையனூர் அருகே உள்ள கீழசொரிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் (வயது 37) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு கண்ணன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது தான் அனுப்பிய பணம் குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். இதில் 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த காளியம்மாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
பழையனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.