செய்திகள்

சிவகங்கை அருகே இருதரப்பினர் மோதல்: 8 பேர் மீது வழக்கு

Published On 2017-04-17 15:44 IST   |   Update On 2017-04-17 15:44:00 IST
சிவகங்கை அருகே இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவ வருகின்றனர்.

சிவகங்கை:

சிவகங்கை தாலுகா இலந்தகுடி பட்டியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது48), முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்.

அங்குள்ள கோவில் வரவு செலவு குறித்து இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் சில நாட்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது.

சம்பவத்தன்று ராஜரத்தினம், கண்ணன் தரப்பினர் கம்பு, கற்களால் தாக்கிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த ராஜரத்தினம் சிவகங்கை தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மோதல் குறித்து இருதரப்பினரும் சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் விசாரணை நடத்தி ராஜரத்தினம், கண்ணன், தனபால், ஆனந்த், பாலாஜி, செந்தில்முருகன், தேவசுதர்சன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கண்ணன், செந்தில் முருகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News