செய்திகள்

ஈஸ்டர் பண்டிகை: கடலூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் கூட்டு திருப்பலி

Published On 2017-04-16 18:24 IST   |   Update On 2017-04-16 18:24:00 IST
ஈஸ்டர் பண்டிகையையொட்டி கடலூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு ஜெபமாலை நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணி அளவில் பங்கு தந்தை அந்தோணிராஜ் தலைமையில் கூட்டு திருப்பலியும் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதேபோல் கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் ஆலயம், மஞ்சக்குப்பம் சகாய மாதா அன்னை ஆலயம் மற்றும் நகரில் உள்ள பிற கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவில் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News