செய்திகள்

பெண் கொலை வழக்கு: சப்- இன்ஸ்பெக்டரை கைது செய்ய உத்தரவு

Published On 2017-04-13 22:43 IST   |   Update On 2017-04-13 22:43:00 IST
பெண் கொலை வழக்கு தொடர்பாக 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத சப்- இன்ஸ்பெக்டரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

ஈரோடு:

ஈரோடு திண்டல் காரப்பாறையை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). இவரது மனைவி பெருமாயி (45).

ராமசாமிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதை பெருமாயி கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் ராமசாமி தனது மனைவி பெருமாயியை கட்டையால் தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த பெருமாயி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். இது குறித்து ஈரோடு குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசாமியை கைது செய்தனர்.

இந்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜர் ஆகும்படி கொலை வழக்கை விசாரித்த தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. நேற்றும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் சங்கருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார். வருகிற 10-ந்தேதிக்குள் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும் படியும் அவர் உத்தரவிட்டார்.

Similar News