செய்திகள்

காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்

Published On 2017-04-08 13:56 IST   |   Update On 2017-04-08 13:56:00 IST
காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் நகர் பகுதியில் 15க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி 12 கடைகள் மூடப்பட்டது.

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயில் சன்னதி தெரு பழைய ரயில் நிலையம் அருகே ஒரு கடையும், காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அருகே இரு கடைகளும் என 3 கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன கடந்த 2 தினங்களுக்கு முன் பெண்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக காமாட்சியம்மன் கோயில் சன்னதி தெருவில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இதனால் தற்போது இயங்கி வரும் இரு கடைகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமகன்கள் வரிசையில் நின்று மதுபானங்கள் வாங்கி செல்கின்றனர். இரு கடைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News