செய்திகள்
ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தம்: மீண்டும் போராட்டம் நடத்த நெடுவாசலில் மக்கள் முடிவு
ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது என்ற தகவல் வேதனையாக உள்ளது. அவ்வாறு நடந்தால் நெடுவாசலில் மக்களை திரட்டி, திட்டம் ரத்தாகும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று கிராம மக்கள் கூறினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளதாக மத்திய அரசு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி அறிவித்தது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 16-ந்தேதி முதல் நெடு வாசலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளின்படி மார்ச் 9-ந்தேதி நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய, மாநில அரசுகள் நம்பிக்கை தெரிவித்ததால் கடந்த 24-ந்தேதி நல்லாண்டார் கொல்லையிலும், 25-ந்தேதி வடகாட்டிலும் மக்கள் தங்களது தொடர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நெடுவாசல், புதுச்சேரியில் காரைக்கால் உள்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு விடப்பட்ட ஏலத்துக்கான ஒப்பந்தம் டெல்லியில் தாஜ் மான்சிங் எனும் நட்சத்திர ஓட்டலில் இன்று (27-ந்தேதி) கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் நெடுவாசல் மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் அளித்த உத்தரவாதத்தின்படி, இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அதையும் மீறி இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கையெழுத் திடப்பட்டால், மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறும் போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறையும். அதனால் விவசாயம், குடிநீர் பாதிக்கும். சுற்றுச்சூழலும் பாதிக்கும். எனவே இத்திட்டம் வேண்டாம் என அமைச்சரிடம் தெரிவித்தோம். மனுவாகவும் அளித்தோம். கோரிக்கை மனுவை மாநில அரசுக்கும், மத்திய சுற்றுச் சூழல் துறைக்கும் அனுப்பி வைக்கிறோம்.
மாநில அரசு மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது. மக்களின் விருப்பத்துக்கு எதிராகவும், மாநில அரசு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமலும் இத்திட்டத்தை செயல்படுத்த முடி யாது என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்து போட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது மிகவும் வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. அவ்வாறு நடந்தால் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களை திரட்டி மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம். இந்த திட்டம் ரத்தாகும் வரை போராட்டத்தை தொடருவோம் என்றனர்.
வடகாடு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த ராஜகுமாரன் கூறும் போது, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக ரூ.12 லட்சத்தை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ளது.
இதை கலெக்டர் உடனே திருப்பி அனுப்ப வேண்டும். மத்திய அரசு ஒப்பந்தம் விடப்பட்ட பட்டியலில் இருந்து நெடுவாசலை நீக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என்றார்.
இதனால் நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு உள்ளிட்ட கிராமங்களில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளதாக மத்திய அரசு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி அறிவித்தது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 16-ந்தேதி முதல் நெடு வாசலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளின்படி மார்ச் 9-ந்தேதி நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய, மாநில அரசுகள் நம்பிக்கை தெரிவித்ததால் கடந்த 24-ந்தேதி நல்லாண்டார் கொல்லையிலும், 25-ந்தேதி வடகாட்டிலும் மக்கள் தங்களது தொடர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நெடுவாசல், புதுச்சேரியில் காரைக்கால் உள்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு விடப்பட்ட ஏலத்துக்கான ஒப்பந்தம் டெல்லியில் தாஜ் மான்சிங் எனும் நட்சத்திர ஓட்டலில் இன்று (27-ந்தேதி) கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் நெடுவாசல் மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் அளித்த உத்தரவாதத்தின்படி, இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அதையும் மீறி இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கையெழுத் திடப்பட்டால், மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறும் போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறையும். அதனால் விவசாயம், குடிநீர் பாதிக்கும். சுற்றுச்சூழலும் பாதிக்கும். எனவே இத்திட்டம் வேண்டாம் என அமைச்சரிடம் தெரிவித்தோம். மனுவாகவும் அளித்தோம். கோரிக்கை மனுவை மாநில அரசுக்கும், மத்திய சுற்றுச் சூழல் துறைக்கும் அனுப்பி வைக்கிறோம்.
மாநில அரசு மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது. மக்களின் விருப்பத்துக்கு எதிராகவும், மாநில அரசு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமலும் இத்திட்டத்தை செயல்படுத்த முடி யாது என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்து போட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது மிகவும் வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. அவ்வாறு நடந்தால் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களை திரட்டி மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம். இந்த திட்டம் ரத்தாகும் வரை போராட்டத்தை தொடருவோம் என்றனர்.
வடகாடு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த ராஜகுமாரன் கூறும் போது, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக ரூ.12 லட்சத்தை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ளது.
இதை கலெக்டர் உடனே திருப்பி அனுப்ப வேண்டும். மத்திய அரசு ஒப்பந்தம் விடப்பட்ட பட்டியலில் இருந்து நெடுவாசலை நீக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என்றார்.
இதனால் நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு உள்ளிட்ட கிராமங்களில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.