செய்திகள்
மானாமதுரையில் 2 சிறுமிகளுடன் தாய் மாயம்
மானாமதுரையில் 2 மகள்களுடன் தாய் மாயமானார். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மானாமதுரை:
மானாமதுரை பாகபத் அக்ரகாரம் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். பரமக்குடி பஸ் நிலையத்தில் பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மனைவி சரண்யா (வயது 25). இவர்களுக்கு மகாலட்சுமி (6), யோகலட்சுமி (5) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
4 தினங்களுக்கு முன்பு சரண்யா, கணவருடன் கோபித்துக் கொண்டு 2 மகள்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார். 3 பேரும் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
இது குறித்து சரவணன், மானாமதுரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய், மற்றும் 2 மகள்களையும் தேடி வருகிறார்கள்.