செய்திகள்

வேதாரண்யம் அருகே பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை

Published On 2017-02-25 16:38 IST   |   Update On 2017-02-25 16:38:00 IST
வேதாரண்யம் அருகே பயிர்கள் கருகியதால் மனவேதனை அடைந்த விவசாயில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 60). விவசாயி. இவர், அதே ஊரை சேர்ந்த சரவணன் என்பவரிடம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடன் வாங்கி நெல் சாகுபடி செய்து இருந்தார்.

இந்தநிலையில் மழை பொய்த்து விட்டதாலும், ஆற்றில் தண்ணீர் வராததாலும் நெற்பயிர்கள் கருகின. இதனால் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என கவலையுடன் இருந்து வந்தார். நேற்று அவர் வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டுசிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட சுந்தரேசனுக்கு பார்வதி என்ற மனைவியும், அன்பழகன், வீரமணி ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

Similar News