செய்திகள்

அரிமளத்தில் இளம்பெண் தற்கொலை

Published On 2017-02-15 23:11 IST   |   Update On 2017-02-15 23:11:00 IST
அரிமளத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரிமளம்:

அரிமளம் ஒன்றியம் ஒனாங்குடி ஊராட்சி சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் காத்தமுத்து. இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா ( வயது 27). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றார்.ஆனால் வயிற்று வலி தீரவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மஞ்சுளா வீட்டில்தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மஞ்சுளா பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மஞ்சுளா தம்பி சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News