செய்திகள்
புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் கல்லூரியில் ரத்த தான பதிவு நிகழ்ச்சி
புதுக்கோட்டை திருமயம் அருகே அமைந்துள்ள மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சிவப்பு நாடா கழகம் சார்பில் தன்னார்வ ரத்ததான பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருமயம் அருகே அமைந்துள்ள மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சிவப்பு நாடா கழகம் சார்பில் தன்னார்வ ரத்ததான பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயபாரதன் செல்லையா தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். துணைத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் துவக்க உரை நிகழ்த்தினார்.
கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் ஜான் வரவேற்புரையாற்றினார். கல்லூரி இயக்குனர் பேராசிரியர் ஜெய்சன் மற்றும் கல்லூரி முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் திருமயம் அரசு ஆஸ்பத்திரி ஐ.சி.டி.சி. கவுன்சிலர் கவிதா தம் சிறப்புரையில் ரத்தானம் செய்வதன் மூலம் நாம் அடையும் நன்மைகளைப் பற்றி விளக்கினார். ரத்த தான பதிவு நிகழ்ச்சியில் 250 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் சிவப்பு நாடா கழக ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
புதுக்கோட்டை திருமயம் அருகே அமைந்துள்ள மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சிவப்பு நாடா கழகம் சார்பில் தன்னார்வ ரத்ததான பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயபாரதன் செல்லையா தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். துணைத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் துவக்க உரை நிகழ்த்தினார்.
கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் ஜான் வரவேற்புரையாற்றினார். கல்லூரி இயக்குனர் பேராசிரியர் ஜெய்சன் மற்றும் கல்லூரி முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் திருமயம் அரசு ஆஸ்பத்திரி ஐ.சி.டி.சி. கவுன்சிலர் கவிதா தம் சிறப்புரையில் ரத்தானம் செய்வதன் மூலம் நாம் அடையும் நன்மைகளைப் பற்றி விளக்கினார். ரத்த தான பதிவு நிகழ்ச்சியில் 250 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் சிவப்பு நாடா கழக ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.