செய்திகள்
கந்தர்வக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
கந்தர்வக்கோட்டையில் இந்திய கம்யூளிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்களை விளக்கி பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
கந்தர்வக் கோட்டை:
கந்தர்வக்கோட்டையில் இந்திய கம்யூளிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்களை விளக்கி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பிரச்சார இயக்கத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உ.அரசப்பன் தலைமை தாங்கினார்.
வறட்சி நிவாரணம் மற்றும் இறந்து போன விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும். ஏரி குளங்களை தூர்வாரவும். 100 நாள் வேலை திட்டத்தில் காலதாமதம் செய்யாமல் கூலி வழங்கவும. வலியுறுத்தி நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் ஒன்றியப் பொறுப்பாளர்கள் தங்கையன்,அம்பி காபதி,பெருமாள், நாகராஜன்.மாவட்டக்குழ அம்பலராசு,ராஜேந்திரன், மற்றும் கலியபெருமாள், புஷ்பம்,விமலா,காட்டுராஜா,கண்ணையன், ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.