ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயி மீது தாக்குதல்
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள எம்.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராயர் (வயது 51), விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாலகுமார் மற்றும் அவரது தம்பி விஜயன் ஆகிய 2 பேரும் ராயரின் வீட்டிற்கு சென்று தகாதவார்த்தைகளால் திட்டினர்.
இதை தட்டிக்கேட்ட ராயருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி பாலகுமார் மற்றும் விஜயன் ஆகிய 2 பேரும் ராயரை சரமாரியாக தாக்கினர். அவரது வீட்டில் உள்ள பொருட்களையும் சூறையாடினர். தாக்குதலில் படுகாயம் அடைந்த ராயரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராயர் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாலகுமாரை கைது செய்தனர். விஜயனை வலைவீசி தேடி வருகின்றனர்.