செய்திகள்

அரியலூர் பஸ் நிலையத்தில் பெண் பலி

Published On 2017-01-24 14:31 IST   |   Update On 2017-01-24 14:31:00 IST
அரியலூர் பஸ் நிலையத்தில் 60வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கி விழுந்து பலியானார். அவர் எந்த ஊரை சார்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
அரியலூர்:

அரியலூர் பஸ் நிலையத்தில் 60வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் சுற்றி திரிந்தவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். தகவல் கிடைத்ததும் அரியலூர் போலிசார் விரைந்து சென்று மயங்கி கிடந்தவரை அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார், அவர் எந்த ஊரை சார்ந்தவர் பெயர் மற்றும் முகவரி தெரியவில்லை பச்சை கலர் நைட்டி அனிந்துள்ளார்.

இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் அரியலூர் காவல் நிலையத்திற்கு 04329-222009 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. அரியலூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றார்.

Similar News