செய்திகள்

மாமல்லபுரம் அருகே பஸ் மீது கல்வீச்சு - டிரைவர் படுகாயம்

Published On 2017-01-24 12:31 IST   |   Update On 2017-01-24 12:31:00 IST
மாமல்லபுரம் அருகே அரசு பஸ் மீது மர்ம கும்பல் கல்வீசினர். இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த எச்சூர் அருகே நேற்று மாலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்ம கும்பல் திடீரென பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. டிரைவர் பாலசுந்தரம் படுகாயம் அடைந்தார்.

கோவளம் அருகே உள்ள கரிக்காட்டு குப்பம், செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News