செய்திகள்
மத்திய, மாநில அரசை கண்டித்து தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
ஜல்லிகட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்து மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை:
ஜல்லிகட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்து மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.கள் குத்தாலம் கல்யாணம், ஜெகவீரப்பாண்டியன், பன்னீர்செல்வம், குத்தாலம் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.