செய்திகள்
கடலில் தவறி விழுந்து நாகை மீனவர் பலி
நாகையில் கட்டு மரத்தில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர் கடலில் தவறி விழுந்து இறந்தார்.
நாகப்பட்டினம்:
நாகை நம்பியார் நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சித்திரவேலு (47). மீனவர். சம்பவத்தன்று கட்டு மரத்தில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர் கடலில் தவறி விழுந்து இறந்தார்.
இது குறித்து அவரது மகன் ஜெகதீஷ் வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.