செய்திகள்

கேளம்பாக்கம் கடலில் மூழ்கி என்ஜினியரிங் மாணவர் பலி

Published On 2017-01-04 14:55 IST   |   Update On 2017-01-04 14:55:00 IST
கேளம்பாக்கம் கடலில் மூழ்கி என்ஜினியரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூர்:

பூந்தமல்லியில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தவர் குணால் (வயது -21) இவரது சொந்த ஊர் மத்திய பிரசேத மாநிலம் ஆகும்.

புத்தாண்டையொட்டி குணால் தனது நண்பர்கள் 10 பேருடன் கோவளத்திற்கு சென்றார். கடலில் இறங்கி அனைவரும் குளித்தனர். அப்போது ராட்சத அலை குணாவை கடலுக்குள் இழுத்து சென்றது அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் பலியான குணாவின் உடல் நேற்று மாலை செம்மஞ்சேரி கடல் பகுதியில் கரை ஒதுங்கியது.

Similar News