செய்திகள்
சீர்காழியில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவி பலி
சீர்காழியில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சீர்காழி:
சீர்காழி தாடாளன் கோவில் காமராஜபுரத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன் (வயது 38), ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் பவிதா (17). இவர், சீர்காழியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை பள்ளிக்கு செல்ல பவிதா, தனது பள்ளி சீருடையை இஸ்திரி பெட்டி மூலம் தேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென இஸ்திரி பெட்டியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு தீப்பொறி கிளம்பியது. இந்த தீ அருகில் இருந்த பவிதாவின் ஆடையில் பற்றியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பவிதாவின் உடல் முழுவதும் தீ பரவியது. இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டார்.
மேலும் பவிதாவை சிகிச்சைக்காக கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் பவிதாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி தாடாளன் கோவில் காமராஜபுரத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன் (வயது 38), ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் பவிதா (17). இவர், சீர்காழியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை பள்ளிக்கு செல்ல பவிதா, தனது பள்ளி சீருடையை இஸ்திரி பெட்டி மூலம் தேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென இஸ்திரி பெட்டியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு தீப்பொறி கிளம்பியது. இந்த தீ அருகில் இருந்த பவிதாவின் ஆடையில் பற்றியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பவிதாவின் உடல் முழுவதும் தீ பரவியது. இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டார்.
மேலும் பவிதாவை சிகிச்சைக்காக கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் பவிதாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.