செய்திகள்

கல்பாக்கம் அருகே பாலாற்றில் ஆண் பிணம்: போலீசார் விசாரணை

Published On 2017-01-02 13:46 IST   |   Update On 2017-01-02 13:46:00 IST
கல்பாக்கம் அருகே பாலாற்றில் கிடந்த ஆண் பிணத்தை கைப்பற்றிய போலீசார், இதுதொடர்பாக கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:

கல்பாக்கத்தை அடுத்த வயலூர் பாலாற்றில் ஆண் பிணம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூவத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

பிணமாக கிடந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும். மர்ம நபர்கள் அவரை அடித்து கொன்று வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News