செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: மாமல்லபுரம் கடலில் குளிக்க தடை

Published On 2016-12-31 12:54 IST   |   Update On 2016-12-31 12:54:00 IST
இன்று நள்ளிரவில் வாகன வேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாட தயாராகி வரும் நிலையில் மாமல்லபுரம் கடலில் குளிக்க கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர்.
மாமல்லபுரம்:

புத்தாண்டை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியினர் மாமல்லபுரம் வந்து கடற்கரை ரிசார்ட், ஓட்டல்களில் தங்கி வருகிறார்கள் இன்று நள்ளிரவில் வாகன வேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாட தயாராகி வரும் நிலையில் மாமல்லபுரம் கடலில் குளிக்க கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர்.

ஓட்டல்களில் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களின் விபரங்களை கட்டாயம் காவல்துறைக்கு தெரியபடுத்துவதுடன் அவர்களின் பாதுகாப்புக்கருதி இன்றும் நாளையும் கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் சூரிய குளியலுக்கு அனுமதிக்ககூடாது என ஓட்டல் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுதி, பண்ணைவீடு, ரிசார்ட்களில் அழகிகளை வைத்து ஆபாச நடணம் நடத்தக் கூடாது, அனுமதி இல்லாத வெளிமாநில, வெளிநாட்டு மது வகைகளை பதுக்கி வைத்து புத்தாண்டு ஸ்பெ‘ல் என அதிக விலைக்கு விற்பணை செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாமல்லபுரம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Similar News