செய்திகள்

கோடியக்கரை அருகே படகுகள் மோதி மீனவர் படுகாயம்

Published On 2016-12-29 15:16 GMT   |   Update On 2016-12-29 15:16 GMT
கோடியக்கரை அருகே படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் மீனவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த மீனவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர்.

வேதாரண்யம்:

நாகப்பட்டினம் ஆரியநாட்டுத்தெருவில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றுள்ளனர். அவர்கள் கோடியக்கரைக்கு தெற்கே ஐந்து கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் ஆரியநாட்டுத்தெருவைச் சேர்ந்த ரவி (வயது 50) என்பவர் இரு படகுகளுக்கு இடையே சிக்கி வலதுகால் முறிந்து படுகாயமடைந்தார்.

அவரை சக மீனவர்கள் மீட்டு கோடியக்கரை கடற்கரைக்கு கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

படுகாயமடைந்த மீனவர் ரவிக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

Similar News