செய்திகள்

கீழ்வேளூர் அருகே போதை பொருள் வைத்திருந்த பெண் கைது

Published On 2016-12-27 17:48 IST   |   Update On 2016-12-27 17:48:00 IST
கீழ்வேளூர் அருகே போதை பொருள் வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கீழ்வேளூர்:

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த காக்கழனி பகுதியில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற் கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பெண் காக்கழனி தோப்பு தெருவை சேர்ந்த துரைசாமி மனைவி சாவித்திரி (வயது50) என்பதும், இவர் 550 கிராம் டயோசிபார்ம் என்ற போதை பொருள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் சாவித்திரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News