செய்திகள்

பொறையாறில் கல்லூரி ஊழியர்களை தாக்கியதாக வக்கீல் உள்பட 2 பேர் கைது

Published On 2016-12-24 16:53 IST   |   Update On 2016-12-24 16:53:00 IST
நாகை மாவட்டம் பொறையாறில் கல்லூரி ஊழியர்களை தாக்கியதாக வக்கீல் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் பொறையாறில் சி.பி.எம்.எல். கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வரலாற்றுத்துறை பொறுப்பு பேராசிரியையாக மல்லிகா புண்ணியவதி என்பவர் பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் வரலாற்றுதுறை தலைவர் விடுமுறை எடுத்ததால் துறை தலைவர் பொறுப்பில் மல்லிகா புண்ணியவதி பணியாற்றினார். அன்று வரலாற்றுதுறை பேராசிரியராக பணியாற்றும் அமிர்தநாதன் தாமதமாக வந்துள்ளார். இதுதொடர்பாக மல்லிகா புண்ணியவதி கேட்டதால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபற்றி கல்லூரி முதல்வர் ஜோனஸ் குணசேகரிடம் மல்லிகா புண்ணியவதி புகார் செய்தார். இதுதொடர்பாக கல்லூரி பேராசிரியர்கள் கேண்டீனில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மல்லிகா புண்ணியவதியின் கணவரும் வக்கீலுமான பிரபாகர் என்பவர் தனது நண்பர் மோகன் என்பவருடன் அங்கு வந்தார். அவர் அமிர்தநாதனுடன் தகராறு செய்து சேரை தூக்கி வீசியுள்ளார். அமிர்தநாதன் தள்ளிச்சென்றதால் அந்த சேர் கல்லூரி ஊழியர்கள் சார்லஸ், செல்வகுமார் ஆகியோர் மீது விழுந்தது. இதில் அவர்களும் சில கல்லூரி மாணவர்களும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் பொறையாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகவேல் வழக்குப்பதிவு செய்து பிரபாகர், மோகன் ஆகிய 2 பேரை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் நிதிபதி முன்பு ஆஜர்படுத்தினார்.  இந்த சம்பவம் பொறையாறு பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News