பாம்பு குறுக்கே வந்ததால் டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பலி
ஈரோடு:
காங்கயம் அருகே ராமலிங்கபுரத்தில் நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இதற்காக இன்று காலை நெல் அறுக்கும் எந்திரத்தை ஒரு டிராக்டரில் ஏற்றிக்கொண்டு 13 பெண் தொழிலாளர்கள் வந்து தொண்டிருந்தனர். இதில் டிராக்டரில் 10 பெண்களும், நெல் அறுக்கும் எந்திரத்தில் 3 பெண்களும் உட்கார்ந்திருந்தனர்.
காங்கயம் அடுத்த ஆலாம்பாடி அருகே வந்த போது ரோட்டில் திடீரென ஒரு பாம்பு சென்று கொண்டிருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர், உடனே ஸ்டிரியங்கை திருப்பினார். இதில் எதிர்பாராத விதமாத ஸ்டிரியங் உடைந்தது. இதனால் டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்த டிராக்டர் எதிரே வந்த மற்றொரு டிராக்டர் மீது மோதியது. பின்னர் ரோட்டோரம் இருந்த பள்ளத்தில் நெல் அறுக்கும் எந்திரத்துடன் டிராக்டர் கவிழ்ந்தது.
இதில் நெல் எந்திரத்தில் உட்கார்ந்திருந்த சென்னிமலை அருகே உள்ள புதுபாளையம் சக்தி நகர் சேர்ந்க சரசாள் (வயது 55) சரசுவதி (30) ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
படுகாயம் அடைந்த 11 பெண்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பு வைத்தனர். இதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் இறந்தார். பலியான இந்த பெண்ணின் பெயர், விவரம் உடனடியாக தெரியவில்லை.
காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் காயம் அடைந்த 10 பெண்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றி காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக டிராக்டரை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (20) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல் அறுக்கும் எந்திரம் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.