சினிமா செய்திகள்
திருநங்கை மீது நடிகர் நாஞ்சில் விஜயன் அவதூறு புகார்
சமூக வலைதளத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதாக திருநங்கை மீது நாஞ்சில் விஜயன் புகார்.
பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் திருநங்கை மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பணம் பறிக்கும் நோக்கத்தில் சமூக வலைதளத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதாக திருநங்கை மீது நாஞ்சில் விஜயன் புகார் அளித்துள்ளார்.
தன்னையும் தனது மனைவியையும் பற்றி அவதூறான கருத்துகளை பரப்பு வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக நாஞ்சில் விஜயன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அவதூறு கருத்துகளை பரப்பும் திருநங்கை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் நாஞ்சில் விஜயன் மனு அளித்துள்ளார்.