செய்திகள்

ஈரோட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை

Published On 2016-12-23 17:06 IST   |   Update On 2016-12-23 17:06:00 IST
ஈரோட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு 46 புதூர் கே.ஏ.எஸ்.நகர், முதல் வீதியை வீதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது60). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு 2 மகன்கன் உள்ளனர். ஒரு மகன் டெல்லியிலும், ஒரு மகன் சென்னையிலும் வேலை பார்த்து வருகிறார்கள்.

சென்னையில் வேலை பார்க்கும் மகனை பார்ப்பதற்காக ரவீந்திரன் மனைவியுடன் ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை சென்றார். நேற்று ஈரோட்டிற்கு திரும்பி வந்தார்.

வீட்டின் கேட்கதவு திறந்து இருந்தது. வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோ கட்டப்பாரையால் உடைக்கப்பட்டு இருந்தது.

பீரோவில் இருந்த 8 பவுன் நகை, 15 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போய் இருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்டு மர்ம ஆசாமிகள் இந்த கைவரிசை காட்டி உள்ளனர்.

இதே போன்று கே.ஏ.எஸ். நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (62). ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர். இவரது அண்ணன் இறந்துவிட்டார். அதனால் அண்ணன் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்று விட்டார்.

பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ கடப்பாரையால் உடைக்கப்பட்டு இருந்தது.

பீரோவில் இருந்த 2 பவுன் நகை, 5ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது. கொள்ளை நடந்த இடம் எப்போதும் ஆட்கள் நடமாட்டத்துடன் இருக்க கூடிய பகுதியாகும். ஒரே நாள் நள்ளிரவில் கொள்ளையர்கள் அடுத்தடுத்து கைவரிசை காட்டி உள்ளது அந்த பகுதி மக்களை பீதி அடைய செய்துள்ளது.

இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களிலும் ஒரே கும்பலே ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இரண்டு வீடுகளிலும் கடப்பாறை கொண்ட பீரோவை உடைத்து நகையையும், பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் விசாரித்து வருகிறார்.

Similar News