செய்திகள்

மயிலாடுதுறை அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது

Published On 2016-12-23 16:35 IST   |   Update On 2016-12-23 16:35:00 IST
மயிலாடுதுறை அருகே வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை கூறைநாடு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (வயது 26). இவர் இரவு 11 மணியளவில் டாஸ்மாக் கடையில் வாங்கிய பிராந்தி பாட்டிலை திறந்து பார்த்துள்ளார். அதனை திறக்க முடியாததை கண்ட லெட்சுமணன் மகன் சிங்காரவேல் (32), எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த குஞ்சான் மகன் ஆறுமுகம் (32) ஆகிய இருவரும் கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிங்காரவேலும், ஆறுமுகமும் சாகுல்ஹ மீது வயிற்றில் கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் மேல் சிகிச்சைகாக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்காரவேல், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர்.

Similar News