செய்திகள்

ஈரோடு கல்லூரி மாணவி சாவில் மர்மம் நீடிப்பு: உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

Published On 2016-12-22 18:19 IST   |   Update On 2016-12-22 18:19:00 IST
ஈரோடு கல்லூரி மாணவி சாவில் மர்மம் நீடிப்பதால் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாணிக்கம் பாளையம் எஸ்.எஸ்.வி நகரை சேர்ந்தவா ராமசாமி .ஆட்டோ டிரைவா. இவரது மகள் சத்தியா (வயது 19). இவா சித்தோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி படித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை சத்தியா கல்லூரிக்கு சென்றார். மாலையில் திரும்பி வந்த போது அவர் சோர்வாக இருந்தார்.

இந்த நிலையில் அவர் திடீர் என்று மயங்கி விழுந்ததாக கூறி அவரது பெற்றோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சத்தியா பரிதாபமாக இறந்தார்.

சத்தியா திடீர் என்று ஏன் மயங்கி விழுந்தார்? அதற்கான காரணம் என்ன? என்பது போன்ற காரணம் எதுவும் தொயவில்லை.

அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. எனவே சத்தியாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அவரது உடலை ஒப்படைத்தனர்.

இந்த பிரேத பரிசோதனையின் முடிவிலும் சத்தியாவின் திடீர் சாவு குறித்து சரியான தகவல் கிடைக்கவில்லை.

எனவே மாணவி சத்தியாவின் உடல் உறுப்புகள் கோவைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது இதன் ஆய்வு அறிக்கை இன்னும் 10 நாளில் வரும் என்றும் அப்போது சத்தியாவின் மரணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என்றும் வீரப்பன் சத்திரம் போலீசார் தொவித்தனர்.

Similar News