செய்திகள்

சென்னிமலை முருகன் கோவிலில் அர்ச்சகர்கள் தங்கும் அறையில் பாம்பு

Published On 2016-12-21 17:28 IST   |   Update On 2016-12-21 17:28:00 IST
சென்னிமலை முருகன் கோவிலில் அர்ச்சகர்கள் தங்கும் அறையில் பாம்பு இருந்ததால் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர். சாமி கும்பிட வந்திருந்த பக்தர்களும் பயந்து நடுங்கினர்.

சென்னிமலை:

சென்னிமலைமலை மீது புகழ் பெற்ற, வரலாற்று சிறப்பு மிக்க முருகன் கோவில் உள்ளது. இங்கு விசே‌ஷ நாட்களிலும் வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில்பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கில் சாமி தரினசம் செய்ய முருகன் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

இங்கு பூஜை முறைகளை கவனித்து கொள்ள 18 அர்ச்சகர்கள் உள்ளனர் இவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருவர் விதம் தொடர்ந்து இரவு பகல் பணிகளில் இருப்பர்.

சென்னிமலை முருகன் கோவிலை பொறுத்த வரை காலை 5.30 மணிக்கு நடை திறந்தால் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும். அதன் பின்பு பள்ளியறை பூஜை நிறைவு பெற்று அனைவரும் வந்த பின்பு கோவில் நடை சாத்தப்பட்டு ராஜா கோபுரத்திற்கு வெளியே வாட்சுமேன் இருப்பார்

அங்கு உள்ள ஒரு தற்காலிக செட்டில் இரவு அர்ச்சகர்கள் தங்கி வருகின்றனர். இந்த தற்காலிக செட் பாதுகாப்பு குறைவாக உள்ளது. மேலும் அடந்த வனப்பகுதி வேறு தற்காலிக செட்டில் அடிக்கடி சிறு சிறு பாம்புகள், வி‌ஷ சந்துகள் வந்து தங்கி கொள்வதும். அதை விரட்டி விட்டு இரவு தங்குவதும். அதற்கு பயந்து அர்ச்சகர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்து இருப்பதும் தொடர் வாடிக்கை ஆகி விட்டது.

இந்த நிலையில் நேற்று அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் வரும் ஆதலால் அனைத்து அர்ச்சகர்களும் மலை கோவிலில் இருந்தனர். நேற்று பகல் நேரத்தில் பெரிய மலை பாம்பு போல் மிக நீண்ட வி‌ஷ பாம்பு ஒன்று அர்சகர்கள் தங்கும் அறையில் வந்து தங்கி கொண்டது.

பகல் நேரத்தில் ஓய்வு எடுக்கலாம் என சென்ற அர்ச்சகர் பாம்பினை பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளார். அதை பார்த்து சாமி கும்பிட வந்திருந்த பக்தர்களும் பயந்து நடுங்கினர். அதன் பின்பு அர்ச்சகர் மூன்று பேர் சேர்ந்து அந்த அறையில் இருந்து பாம்பினை மெதுவாக விரட்டி வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

இதனால் இரவு நேரத்தில் அர்ச்சகர்கள் தங்குவதற்கு நல்ல முறையில் பாதுகாப்பான அறை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், அல்லது கோவில் உள்புறம் படுத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள் போர் கொடி தூக்கும் முன் கோவில் நிர்வாகம் வசதிகள் ஏற் படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News