செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக குறைந்தது

Published On 2016-12-17 04:05 GMT   |   Update On 2016-12-17 04:05 GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

நேற்று காலை 79 கன அடியாக வந்த நீர்வரத்து இன்று காலை 32 கன அடி யாக குறைந்தது. இதனால் அணை நீர்மட்டமும் 38.78 அடியில் இருந்து 38.64 அடியாக குறைந்து விட்டது.

அணையில் இருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்தைவிட நீர் திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Similar News