செய்திகள்

ஜெயலலிதா மறைவையொட்டி அ.தி.மு.க.வினர் மொட்டை போட்டு அஞ்சலி

Published On 2016-12-08 21:31 IST   |   Update On 2016-12-08 21:31:00 IST
தேவகோட்டையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 30க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேவகோட்டை:

முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி தேவகோட்டை நகர செயளாலர் ராமசந்திரன் முன்னிலையில் நகர்மன்ற துணைத்தலைவர் சுந்தர லிங்கம் தலைமையில், நகர செயலாளர் ராமசந் திரன் உட்பட 30க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்தார்கள்.

மகளிர் அணி உட்பட சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கண்ணீர் மல்க ஆண்டவர்செட்டில் இருந்து மவுன ஊர்வலமாக பேருந்து நிலையம் வரை வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந் நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டார்கள்.

Similar News