செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்

Published On 2016-12-08 13:55 IST   |   Update On 2016-12-08 13:55:00 IST
ஜெயங்கொண்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் மற்றும் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்:

தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் தொழிற் சங்க பேரவையின் சார்பாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் மற்றும் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்திற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் மணி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் விஸ்வ கர்ம அனைத்து பிரிவு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். ஊர்வலமானது ஜெயங்கொண்டம் அண்ணாசிலையில் தொடங்கி திருச்சிரோடு, நான்குரோடு, தா.பழுர் ரோடு, பேருந்துநிலையம் வழியாக மீண்டும் அண்ணாசிலையில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் 5 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் இளைஞரணி தலைவர் இளங்கோவன் நன்றி கூறினார்.


Similar News