செய்திகள்
வேன் வாங்கித் தருவதாக ரூ.3¼ லட்சம் மோசடி: 2 பேர் கைது
காரைக்குடி அருகே வேன் வாங்கித் தருவதாக ரூ.3¼ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
நெல்லை மாவட்டம், செங்கோட்டை தாலுகா, புலிகரை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சுற்றுலா வேன் வாங்குவதற்காக காரைக்குடி காளையப்பா நகரைச் சேர்ந்த சரவண பாண்டி (வயது 36), திலகர் நகரைச் சேர்ந்த முகமது அப்துல் காதர் ஜெயினுலாதீன் (32) ஆகியோரை அணுகியுள்ளார். அவர்கள் ஒரு சுற்றுலா வேனை காட்டி விற்பனைக்கு என்று கூறி ரூ.3¼ லட்சம் பணம் பெற்றுள்ளனர்.
ஆனால் அவர்கள் வேனை ஒப்படைக்க வில்லை. பலமுறை கேட்டும் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வில்லையாம். இது குறித்து மணிகண்டன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சரவணபாண்டியை கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அப்துல் காதர் ஜெயினுலாதீனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
நெல்லை மாவட்டம், செங்கோட்டை தாலுகா, புலிகரை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சுற்றுலா வேன் வாங்குவதற்காக காரைக்குடி காளையப்பா நகரைச் சேர்ந்த சரவண பாண்டி (வயது 36), திலகர் நகரைச் சேர்ந்த முகமது அப்துல் காதர் ஜெயினுலாதீன் (32) ஆகியோரை அணுகியுள்ளார். அவர்கள் ஒரு சுற்றுலா வேனை காட்டி விற்பனைக்கு என்று கூறி ரூ.3¼ லட்சம் பணம் பெற்றுள்ளனர்.
ஆனால் அவர்கள் வேனை ஒப்படைக்க வில்லை. பலமுறை கேட்டும் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வில்லையாம். இது குறித்து மணிகண்டன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சரவணபாண்டியை கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அப்துல் காதர் ஜெயினுலாதீனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.