செய்திகள்

செக் மோசடி வழக்கில் செல்போன் கடைக்காரருக்கு ஓராண்டு சிறை

Published On 2016-12-04 16:13 IST   |   Update On 2016-12-04 16:13:00 IST
செக் மோசடி வழக்கில் செல்போன் கடைக்காரருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து காரைக்குடி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
காரைக்குடி:

காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 30). கோவிலூர் ரோட்டில் செல்போன் கடை வைத்துள்ளார். இவர், முத்துப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரிடம், தனது தொழில் அபிவிருத்திக்காக ரூ.2 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். மேலும் வாங்கிய கடனை 6 மாத காலத்திற்குள் திருப்பி தருவதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து 6 மாதம் முடிந்த பிறகு கிருஷ்ணன் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் வட்டியோடு சேர்த்து ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்திற்கான செக் ஒன்றை கொடுத்தார். குறிப்பிட்ட தேதியில் கிருஷ்ணன் செக்கை வங்கியில் செலுத்தியபோது, அதில் பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டது. இதுகுறித்து சீனிவாசனிடம் கேட்டபோது அவர் பொறுப்பான பதில் அளிக்காமல் இருந்து வந்தார்.

இதனால் கிருஷ்ணன் செக் மோசடி குறித்து காரைக்குடி விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணன் செக் மோசடி செய்த சீனிவாசனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தார். மேலும் 1 மாத காலத்திற்குள் கடனை திரும்ப கொடுக்கவில்லை என்றால் மேற்கொண்டு 3 மாதம் சிறைத்தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

Similar News